இஷான் கிஷன் ‘ருத்ரதாண்ட’ ஆட்டம்: நான் யார் என்று தெரிகிறதா?

“நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்டே” என்ற பாடல் வரிக்கு ஏற்றால் போல் தான் இருந்தது இன்றைய IPL போட்டியில் இஷான் கிஷனின் சரவெடி ஆட்டம்.

மைதானத்தின்  நான்கு பக்கமும் பந்தை பறக்க விட்டு ஐபிஎல் வரலாற்றிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் இஷான் கிஷன்.

இன்றைய IPL போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில்  இஷான் கிஷனின் ருத்ரதாண்டவ ஆட்டத்தை  RR பந்து வீச்சாளர்களால் தடுக்கவே முடியவில்லை. 47 பந்தில் 106 ரன். Not out.

105 ஆவது போட்டியில் முதல் சதம். இதற்கு முன் அவரது அதிகபட்ச ரன் 99. தற்போது இதை 106 ஆக மாற்றியுள்ளார். IPL தொடரில் குஜராத் அணிக்காக அறிமுகமானார். பின்னர் மும்பை அணியில் இடம் பெற்றார்.2019, 2020 ஆம் ஆண்டு மும்பை அணி கோப்பை வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார்.

நடப்பு சீசனில் SRH அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் IPL-ல் 5000 ரன் கடந்த வீரர் என்ற பெருமையையும் இப்போது இவர் பெற்றுள்ளார்.

இஷான் கிஷனின் சதத்தின் மூலம் SRH அணி 286 என்ற இமாலய இலக்கை எட்டி இப்போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது. இனிவரும் போட்டியில் இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த போது யார்?

இந்திய அணியில் தொடர்ச்சியாகவே இஷான் கிஷன் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். ஃபார்மில் இல்லை என கூறி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அப்படியே அணியில் இடம்பெற்றாலும் வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் வாட்டர் பாயாகத்தான் அவரை பயன்படுத்துகின்றனர்.

தற்போது இந்த IPL தொடரில் 47 பதில் சதம் அடித்து ,’நான் யார் என்று தெரிகிறதா.. தீ என்று புரிகிறதா’ என இந்திய அணி நிர்வாகத்திற்கு எதிராக கர்ஜித்து இருக்கிறார் இஷான் கிஷன்.


Posted

in

,

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *