IPL கிரிக்கெட் திருவிழா தொடங்கிவிட்டது. இனி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாலை நேர இளைப்பாறுதல் IPL தான். இந்த தொடரின் முதல் போட்டியே அதிரடியாகவும் சரவெடியாகவும் தொடங்கியுள்ளது.
ஈடன் கார்டனில் நடந்த முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியும் மோதியது. முதலில் பேட் செய்த KKR வீரர் டி காக் 4 ரன்னிகளில் வெளியேற , அடுத்து வந்த சுனில் நரேன் – ரகானே ஜோடி அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த ஜாடி 107 ரன் குவித்து இருந்தபோது ராசிக் சலாம் வேகப்பந்தில் கேச் கொடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார் சுனில் நரேன். பின்னர் க்ருனால் பாண்டியா சுழலில் KKR சிக்கிக் கொண்டது. 4 ஓவரில் 3 விக்கெட் எடுத்து KKR அணியின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார் க்ருனால் பாண்டியா.
பிறகு அடுத்தத்து வந்த வீரர்களும் அவுட் ஆகி வெளியேற இறுதியில் 174 ரன் என்ற இலக்கை RCBக்கு நிர்ணயித்தது KKR.
பின்னர் 174 இலக்கை சேஸ் செய்ய களம் இறங்கிய RCB அணியின் தொடக்க வீரர்கள் வீராட் கோலி, சால்ட் ஜோடி அதிரடியாக தங்கள் ஆட்டத்தை வேளிப்படுத்தினர். இவர்களது ரன் வெட்டையை KKR பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
விக்கெட் கொடுக்காமலே ஆட்டத்தை முடித்து விடுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்து கொண்டு இருந்த போது
95 ரன்னில் வருண் சக்கரவர்த்தி சூழலில் அவுட் ஆகி வெளியேறினார் சால்ட். இந்த வீரர் 31 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
அதேபோல் கோலியும் அரைசதம் அடித்து இந்த முறை IPL கோப்பை நமக்குதான் என்ற நம்பிக்கையை RCB ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறார். 22 பந்துகள் மீதம் வைத்து 174 ரன்னை எளிதாக கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் RCB வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை அடுத்து இம்முறை கோப்பை எங்களுக்கு தான் என சட்டை காலரை தூக்கி கெத்தாக பேசி வருகின்றனர் RCB ரசிகர்கள். ‘ஈ சாலா கப் நம்தே’ என்பதை அடுத்தடுத்த போட்டிகள் உறுதி செய்யுமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்…

Leave a Reply